பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

காலம் காட்டும் ஜாலம்.


ஞாபகம் வருதே!!

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

"நிபந்தனை(கருணை) மனு"

பிடி -வாரன்ட்டு

நண்பர்களே,

இன்றைய உலக  மனிதகுல நாகரீக  பரிணாமவளர்ச்சியில், பல அறிவியல், தொழில் நுட்ப, விவசாய, தகவல் பரிமாற்ற துறைகளில் மா பெரும் வளர்ச்சியினை கண் கூடாக பார்த்து வருகிறோம். இதுபோன்ற அறிவு வளர்ச்சியின் மற்றுமொரு பரிணாமம்தான் சட்டங்களும் அவற்றின் பங்களிப்பும்.

திங்கள், 28 டிசம்பர், 2015

இங்கிலாந்திலும் பிரபலமான "பீப்" சாங்.

எல்லோருக்கும் ரொம்ப பிடிக்குது. 

நண்பர்களே,

சமீபகாலமாக ஊடகங்களையும் சமூக வலை தளங்களையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு அவற்றில் நித்தம் பவனி வரும் ஒரு விடயம் உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

டி ராஜேந்தரின் (அர்த்தமுள்ள) பாடல்

"மீன்குஞ்சு"

நண்பர்களே,

தமிழகம் மட்டுமல்லாமல், உலகில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களுக்கு தெரிந்த , தமிழக திரை பிரபலங்கள் பலரில் மிகவும் பரிச்சியமும் பிரபல்யமுமானவர் திரு டி ராஜேந்திரன் அவர்கள்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

மறக்கமுடியுமா?

"உன்னோடு வாழ்தல் அரிது"


நண்பர்களே,

உணவு மனிதருக்கு மட்டுமல்லாமல் உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் இன்றியமையாத ஒன்று என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

சனி, 26 டிசம்பர், 2015

பாடப்பா பழனியப்பா...

இப்போ நீ எங்கேப்பா?

நண்பர்களே,,

எனது முந்தைய  பதிவான, "குடைக்குள் மழயில்" எங்களுடன் எங்கள் வீட்டருகே இருந்த ஒரு ரிக்க்ஷா காரர் வந்தார் என குறிப்பிட்டிருந்தது, உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கிறிஸ்மஸ் ஜம்ப்பர்.

ஜம்ப்(பு) லிங்கம்

நண்பர்களே,

மேலை நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல வினோத செயல்களும் பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம்.

வியாழன், 24 டிசம்பர், 2015

விரலுக்கேத்த வீக்கம்.

"அவனும் அவலும்"

நண்பர்களே,

நம்முடைய சமூகத்தில் உலாவரும் பழங்கால சொற்களும் சொற்றொடர்களும் பெரும் அர்த்த புதையலாக விளங்குவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றோம்.

புதன், 23 டிசம்பர், 2015

பாட்டு கேட்க "வா".

பார்த்(து)ததை பேசவா?

நண்பர்களே ,

நேற்றைய எமது   - பாட்டு பாட - "வா" எனும் பதிவில், சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கிறிஸ்மஸ் கீத இன்னிசை நிகழ்ச்சியில் நான் ரசித்த தமிழ் பாடல்கள்  எனும் வரிசையில்  ஒரு பாடலை குறிப்பிட்டு அடுத்த பாடல் 
எதுவென்று இன்று சொல்வதாக வாக்களித்திருந்தேன் நினைவுண்டா?

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாட்டு பாட - "வா"

பாட(ம்) சொல்லவா?

நண்பர்களே,

வருடா வருடம் கிறிஸ்த்து பிறப்பின் நன்னாளை கொண்டாடும் நம் கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகள்  , இந்த பண்டிகையை முன்னிட்டு செய்யும் பலவிதமான தயாரிப்புகள்,மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கிறிஸ்மஸ் "கேரல்ஸ்"   என சொல்லப்படும்  "இன்னிசை கீத இசை நிகழ்ச்சிகள்".

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

குழந்தையை காணவில்லை.

மாயமென்ன?

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அங்காடிக்கு சென்றிருந்தேன்.

அந்த அங்காடி சுமார் 5 அடுக்குகள் கொண்ட ஒரு பிரமாண்டமான - அங்காடி.

மால் போன்று இல்லாமல் ஒரு தனியான நிறுவனத்தை சார்ந்த அங்காடி அது.

ஏற்கனவே நாம் அறிந்தபடி, இப்போது விழா காலம் என்பதால், கூட்டம் அலை மோதிகொண்டிருந்தது.

வியாழன், 17 டிசம்பர், 2015

பண்டிகையும் - பரிசுபொருளும்.

 கொண்டாட்டம் யாருக்கு? 


நண்பர்களே,

ஐரோப்பா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுள் எந்த மதமும் சாராதவர்களும் வேறு  மதங்களை சார்ந்தவர்களும் கூட  மிகவும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகமுடனும்,

செவ்வாய், 15 டிசம்பர், 2015

"கழுதையும் கால்கட்டும்"

"நினைவு!! நாள்"

நண்பர்களே,

திருமண வயதை அடைந்தும் திருமணமாகாத அதே  சமயத்தில் சண்டித்தனம் செய்துகொண்டு, பொறுப்பற்று சுற்றித்திரியும் ஆண்களை பார்க்கும் பெரியவர்கள் "ஒரு கால்கட்டு" போட்டுவிட்டால் எல்லாம்  சரியாகிவிடும் என்று சொல்லும் வழக்கமான பேச்சை கேட்டிருப்போம்.

திங்கள், 14 டிசம்பர், 2015

"கோ" குறளின் கூக்குரல்!!

ஜீவன் இல்லா ஜீவன்கள்!!!

நண்பர்களே,

உலகில் வாழும் எத்தனையோ கோடி மக்களுள் கணிசமான ஒரு தொகை மக்கள் மிகவும் வெகுளியாக , உலகின் போக்கும், அதன் சூதும் வாதும் தெரியாதவர்களாகவும், வெளுத்ததெல்லாம் பால் எனவும் மின்னுவதெல்லாம் பொன் எனவும் நினைத்துகொண்டு இருப்பதை பார்க்கும்போதும் , அவர்களை பற்றி கேட்க்கும்போதும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேசும் மரங்கள்!!


"உன்னை காணாமல் ... நான் ... இங்கு...."

நண்பர்களே,

நம்மிடம் யாராவது ஏதாவது பேசினாலோ கேட்டாலோ அதற்கு நாம் பதிலொன்றும் சொல்லாமல் இருந்தால், " நீ என்ன ஒன்னும் பேசாம மரம்போல் நிற்கின்றாய்" என கேட்பதுண்டு.

வியாழன், 10 டிசம்பர், 2015

சிம்பு போய் விஜய் வந்த கதை.



ஒன்னுபோனா இன்னொன்னு

நண்பர்களே ,

பொதுவாக நான் சினிமா பற்றியோ நடிகர் நடிகைகளை பற்றியோ விமரிசனங்களை எழுத விரும்பாதவன்.

சனி, 5 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -3



ராசியான  ராமாஞ்சி ஆயா.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 2..சொடுக்கவும்

அம்மா பதட்டத்துடன் அந்த வீட்டுக்காரரிடம் , "என்ன சொல்றீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்தான்.... என்ன ஆனது?"

வியாழன், 3 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -2

மலருமா  விடை?

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 1...சொடுக்கவும்

அப்படி என்ன காட்ச்சியை பார்த்தேன்.

காலையில் அந்த குடிசைகள் இருந்த பகுதியை நெருங்கிய எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி:

புதன், 2 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -1

மாறியது நடை.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை ...சொடுக்கவும்

அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னுடைய குடை மடங்கி மடங்கி போனதால், ஒரேயடியாக குடையை மடக்கி கையில் பிடித்துகொண்டு,

சனி, 28 நவம்பர், 2015

மழைக்குள் குடை

மனசுக்குள் அடை

நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக அடாது பெய்துகொண்டிருக்கும்  மழையின் காரணமாக பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும், தாங்கொண்ணா துயரங்களுக்கும் ஆளான தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 4


வாகை சூடும் உன் வாசல் தேடும்....

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.-3 சொடுக்குங்கள்

அடுத்ததாக மொழிப்பற்று:

நாம் எந்த மொழியினராக இருந்தாலும் அவரவர் தாய் மொழியினை மதிக்கவும் , அவற்றை பேசவும் , எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.  நாமே நம் தாய் மொழியின் மீது நாட்டம் குறைந்தவர்களாக இருப்பின் வேறு எவர் நம் மொழியை கொண்டாடுவர்.

வியாழன், 26 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 3

மெய்பொருள் காண்பது அறிவு!

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு -  சொடுக்குங்கள்

அவையில் கூடி இருக்கும் அன்பிற்கினிய  தம்பி தங்கைகளே, உங்களோடு மூன்று செய்திகளை கூறி விடைபெறலாம் என நினைக்கின்றேன், அவற்றுள் முதன்மையானதும் நான் மிக முக்கியமானதாக கருதுவதும் " தேசபற்று".

புதன், 25 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 2

தவப்புதல்வனுக்கு தலை வணக்கம்


தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு சொடுக்குங்கள்.

மேடையில் கற்றறிந்த பெரியயவர்களுக்கு நடுவில் பிரதான இருக்கையில் அமர்ந்தபடி அரங்கில் கூடி இருந்த அறிவார்ந்த பெரியோர்களையும் நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாகிய இன்றைய மாணவ மாணவியரை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.



என்னவென்று நானுரைப்பேன்?

நண்பர்களே,

எமது முந்தைய பதிவான ஒரு கல்லில் மூன்று மாங்கனிகளில் இறுதியில், என்னுடைய கல்லூரி பழைய மாணவர் பேரவையில் இருந்து அழைப்பு வந்ததா என்பதை பிறகு சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

"வாலைப்பல தோலு வலுக்கி விலுந்த ஆலு"

பெண்ணே உன் மேல் பிழை (இல்லை) 

நண்பர்களே,

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும்  தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான்  இருக்கின்றது.

வியாழன், 19 நவம்பர், 2015

"நூறாண்டுகாலம் வாழ்க"

டும் ...டும் ...டும் 

நண்பர்களே,

எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம்.  அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.

புதன், 18 நவம்பர், 2015

"பல்லு - சொல்லு - cellலு"

ரொம்ப இளிக்காதீங்க !!

நண்பர்களே,

நம்மில் பலரும் சின்ன வயதில் நம்முடைய உடன் பிறப்புகளுடன், சண்டை போட்டிருப்போம். அந்த சண்டை வாய் சண்டையாகவோ அல்லது கை கலப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பொன்மாலையில் வண்ண பூ மாலை.

தேன் சிந்துதே....


நண்பர்களே,

குழலினிது  யாழினிது  என்பர் ;தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்.

எனும் குறளின் இனிமையும் உண்மையும் உலகில் வாழும் ஆண் பெண், திருமணமானவர், ஆகாதவர், குழந்தைகள் இருப்பவர் இல்லாதவர், துறவி, கொடுங்கோலன், தீவிரவாதி இப்படி எல்லோரும் எதோ ஒரு சூழலிலாகிலும், வாழ்வில் ஒரு முறையேனும் உளமார உணர்ந்திருப்பார்.

புதன், 11 நவம்பர், 2015

நண்பன் கட்டிய மஞ்சள் கயிறு!!

ஆயிரம்  காலத்து.............


நண்பர்கள்,

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் , பலவித சூழ்நிலைகள் நெருக்கடிகள் காரணமாக ,கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே "மஞ்சள் கயிறுடன்" ஒப்பந்தம் - ஒரு பந்தம்   செய்து வைக்கப்படும் மாணவர் மாணவியரை நாம் பார்த்திருப்போம், அவர்களுடன் சேர்ந்தும் படித்திருப்போம்.

செவ்வாய், 10 நவம்பர், 2015

"அப்பாவின் காலணிகள்".

இன்னும் வரவில்லை!!

நண்பர்களே,

காலையில் எழுந்து குளித்து முடித்து , காலை உணவு முடித்துவிட்டு, ஒன்றாம் வகுப்பு பள்ளிக்கூட பையை எடுத்துகொண்டு , அப்பாவிற்கும் அம்மாவிற்கும் டாட்டா சொல்லிவிட்டு வாசல் இறங்கி நடக்கும் போதும்  பலமுறை திரும்பி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் பார்த்து,

சனி, 7 நவம்பர், 2015

வரலாறு ப(டி)டைத்தவர்!

 சிங்கத்தின் கால்கள்....

நண்பர்களே,

வலைபதிவுலகத்தில் தடம் பதித்த நாள் முதலாய், ஒரு சிறப்பு மனிதரை குறித்து ஒரு பதிவு எழுதவேண்டும் அதன்மூலம், அவரது, தன்னம்பிக்கை, விடா முயற்சி, தனித்தன்மைகளை குறித்து வலை உலக நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துகொண்டிருந்தேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

நிகழ்ச்சி- புகழ்ச்சி - இகழ்ச்சி !!!

கௌரவ மாலைகள்

நண்பர்களே,

தொலை காட்சியில் சில நேரடி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனம் மகிழ்வதும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மனம் நெகிழ்வதும் இன்னும் சில காட்ச்சிகளை பார்க்கும்போது உள்ளத்தில் வேதனையும் துயரமும் ஏற்படுவதுமுண்டு.

புதன், 4 நவம்பர், 2015

"பாவம் போக்கும் ஆங்கில மருந்து!!??"

கோ காது கே காதா?

நண்பர்களே,

நாமோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ, உடல் நலம் இல்லாமல் கஷ்டபடுகின்ற நேரத்தில், என்ன பாவம் செய்தோமோ, அல்லது செய்தார்களோ, இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்கின்றதே என்று சொல்லுவதும் சொல்ல கேட்பதும் வழக்கம்தான்.

புதன், 28 அக்டோபர், 2015

ஓர் "அங்க" நாடகம்!!

வயிற்றுவலி போயாச்சா?

நண்பர்களே,

தேதிகளில்பல தேதிகளுக்கு பல சிறப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு, முதல் தேதி என்றால் பெரும்பாலோருக்கு சம்பளம், வருடபிறப்பு, இரண்டாம் தேதி என்றால் காந்தி ஜெயந்தி, 14 என்றால் காதலர் தினம்,

திங்கள், 26 அக்டோபர், 2015

"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்!"

வான்புகழ்!!


நண்பர்களே,

சமீபத்தில் அய்யன் திருவள்ளுவரின் பூர்வீகம் பற்றியதான ஒரு கட்டுரையை நமது வலைதளத்தில் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கோலங்கள் - மாயா ஜாலங்கள்!!

காலம்  செய்த(அலங்)கோலங்கள்!!

நண்(பர்)பிகளே,

நமது இந்திய  கலாச்சாரம் பண்பாடு நாகரீக தொடர்வுகளாக தொன்றுதொட்டு நாம் கடைபிடிக்கும் பல விஷயங்களில், வீட்டை கழுவி, மெழுகி சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டு வீட்டு முகப்பையும் வீட்டு உட்புறங்களையும் அழகு செய்வதும் ஒன்று.

சனி, 24 அக்டோபர், 2015

பரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்

காலம் கைகூடும்!

நண்பர்களே,

சத்தியவான் சாவித்திரிகள் மட்டுமே காலங்களை கட்டுபடுத்தி சூரிய உதயத்தை தாமதபடுத்தினர்  என்று காவியங்களில் அறிந்திருக்கின்றோம்.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.

அதி மதுரம் !!!

நண்பர்களே,

கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.

திங்கள், 19 அக்டோபர், 2015

ஆவியோடு ஒரு அனுபவம் !!

அட்டகாசம் - அலம்பல் - அழிச்சாட்டியம் 

தொடர்கிறது.............

முன்குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

சனி, 17 அக்டோபர், 2015

ஆவிகள் உண்மை(யா?)தான்.

அனுபவம் பேசுகிறது.... திகிலுடன் !

நண்பர்களே,

முன் குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

வியாழன், 15 அக்டோபர், 2015

நெறியா... வெறியா...சரியா?

ஹிந்தி (ஏன்) ஒழிக!!  

தொடர்கிறது....

அப்படி என்ன சொன்னார் என் நண்பர்?.........

முதலில் இருந்து வாசிக்க தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

இவரும் சம்பளத்திற்கு வேலைபார்த்த ஒரு சராசரி தமிழ் ஆசிரியர்தான் போலிருக்கிறது.

நண்பரின் கூற்று என் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தது.

புதன், 14 அக்டோபர், 2015

தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

செப்பும் மொழி பதினெட்டு..


நண்பர்களே,

விடுமுறைக்கு தாயகம் சென்றிருந்தபோது, புதிதாக திறக்கப்பட்டுள்ள வங்கி கிளையில் இருந்து வந்த அழைப்பினை ஏற்று வங்கி கிளை மேலாளரை சந்திக்க சென்றிருந்தேன்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வந்ததும் - வெந்ததும் - தந்ததும்

ஆனந்தம் பொங்கி பொங்கி.......

நண்பர்களே,

குடும்ப பாரங்களை ஆண்கள் சுமப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, பெண்கள் மத்தியில்  ஆண்களுக்கு எதிராக எப்போதும் ஒலிப்பதுண்டு. அதேபோல வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குகொள்வதில்லை என்றொரு அப்பட்டமான

குழி(பறித்த)பணியாரம்!!

இன்றைய ஸ்பெஷல்!!!


தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க ஆப்பம் -ஆசை- தோசை இங்கே சுடுங்கள்.

பரவாயில்லையே, நல்ல ஓட்டலுக்குகுத்தான் வந்திருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தபோது, சர்வர் வந்து என்ன சார் சாப்பிடபோறீங்க , என கேட்டுவிட்டு வரிசையாக  அவர்களின் ஓட்டலில் உள்ள அத்தனை பலகாரங்களையும் சொல்ல ஆரம்பிக்க

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கூடுகை கொண்டாட்டம்!!

வாழ்த்துக்கள் !!

நண்பர்களே,

இங்கே இந்த மாபெரும் உலகம் தழுவிய தமிழ் வலைபதிவர் மாநாட்டை தங்கள் வருகையினாலும் , வாழ்த்துக்களினாலும் சிறப்பு செய்யும் அத்துணை நெஞ்சங்களையும் மனதார வாழ்த்தி என் உரையை துவங்குகின்றேன்.

வியாழன், 8 அக்டோபர், 2015

ஆப்பம் - ஆசை - தோசை!!

ஜொள்ளு, சொல்லு !!


நண்பர்களே,

நாம் தினந்தோறும் உண்ணும் பிரத்தியேகமான உணவுகளுள் இட்டிலி, தோசை,ஊத்தாப்பம்,அடை, ஆப்பம்,இடியாப்பம், பணியாரம் அதாங்க குழி பணியாரம் போன்ற அனைத்து பலகாரங்களின் அடிப்படை மூலக்கூறுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் ,ஒவ்வொரு பலகாரமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையும் சிறப்பும் சுவையும் கொண்டவை என்பதில் சட்டினி தாளிக்க பயன்படும் கடுகளவும் மிகை அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பிளாஸ்டிக் சர்ஜெரி! - பிளாஸ்த்திரி!!

காகித கண்துடைப்பு!!


நண்பர்களே,

வளர்ந்து வரும் இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் எத்தனையோ புதுமையான விஷயங்களை நாம் கண்டும் கேட்டும், படித்தும் அறிந்திருக்கின்றோம்

திங்கள், 5 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி - மகிழ்ச்சி!!!

 பரந்த உள்ளங்கள் !!!


நிகழ்ச்சி - நெகிழ்ச்சி  மகிழ்ச்சியுடன்   தொடர்கிறது.... .

அப்படி அந்த இளைஞன் அந்த முதியவரிடம் என்ன கேட்டான்  ?

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி !!

திறந்த வெளியில் .....!!!

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் நான் காண  நேர்ந்த  ஒரு நிகழ்ச்சி  மனதிற்கு நெகிழ்ச்சியாக  இருந்தது.

இதோ அந்த காட்சியின் நீட்சி உங்களுக்காக.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மனிதம் - புனிதம்

பொழுதுபோக்கு 


நண்பர்களே,

விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.

வியாழன், 1 அக்டோபர், 2015

"(அ)பேஸ் புக் ஆசாமிகள் "


வீடு காலி (ஒன்றும்) இல்லை !

நண்பர்களே,

நாகரீகத்தின் முகவரி கிடைக்கும் முன் மனிதன் , விலங்குகளை வேட்டையாடி அவற்றின் பச்சை மாமிசங்களை உண்டான் என்றும்,காடுகளிலும்

புதன், 30 செப்டம்பர், 2015

மருத்துவம் - "மக" த்துவம்

மக(ள்)ப்பேறு

நண்பர்களே,

மாறிவரும் விஞ்ஞான உலகில், மனிதனின் மூளை வளர்ச்சியும் அதன் காரணமாக விளையும் எத்தனையோ, சாதக பாதக விளைவுகளும் அவற்றால் மனித குலத்திற்கும்

சனி, 26 செப்டம்பர், 2015

"ராணி மண்ணில் ராஜா"

சதி திட்டம் !!


நண்பர்களே,

"சதி" என்ற சொல்லுக்கு திட்டமிட்டு தீங்கு இழைத்தல் என்ற ஒரு பொருள் உண்டு. உலகில் ஆங்காங்கே

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

"அம்மா வணக்கம்"



இதோ வந்துட்டேன்.

 நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக பதிவுலகத்தில் என் எழுத்துக்கள் கால் பதிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முழுமுதற்காரணம்,

புதன், 29 ஜூலை, 2015

"தங்கமே! வைரமே!!"

 புள்ளி வச்சி படிக்கனும். !!

நண்பர்களே,

பொதுவாக, பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை கொஞ்சும்போது, முத்தே மணியே, தங்கமே , வைரமே என்று கொஞ்சுவதை கேட்டு இருப்போம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

"கலாமுக்கு (கண்ணீர்) சலாம்"

இற(ர)ங்கல் வேண்டி........

மேதகு எங்கள் மேன்மையின் நாயகனே......
உமக்கு இரங்கல் தீர்மானம் ....

திங்கள், 27 ஜூலை, 2015

"காலம் மாறிபோச்சு"


புரிஞ்சிக்கவே முடியல.....

நண்பர்களே,


சின்ன வயதில் உணராமல்  
நாம் எதை செய்தாலும்

வெள்ளி, 24 ஜூலை, 2015

"ஐந்து பைசா ஆஸ்பத்திரி"

"Money"த நேயம்!!

நண்பர்களே,

உலகத்தில் எங்கு பார்த்தாலும் புது புது வியாதிகள் தினந்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

வியாழன், 23 ஜூலை, 2015

"இரவல் வாங்கவில்லையே"


சுதந்தர தின வாழ்த்துக்கள்!!

Image result for picture of indian national flag

பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்க்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது  ஈடு?

அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம்  அவனியில் கடையர்.

வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?

அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது 
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.

இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே 
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?

காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கு எல்லாம்  கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.

பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி 
சரித்திரம்  சொல்லும் பலர்முகம் 

குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே  எல்லையில் 
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு 
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று 

வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி 
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.


எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?

வாழ்க பாரதம்!

ஜெய் ஹிந்த்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நன்னாளில் பிறந்த நாள் காணும் என் இதயத்திற்கும் என் வாழ்க்கைக்கும் மிகமும் நெருக்கமான என் அன்பிற்குரிய என் பெரிய அக்கா அவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

"கலர்முகம் கரிமுகம்"

ஸ்மைல் ப்ளீஸ்....!!!!

தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க நரிமுகம் மறைமுகம்

ஒருவேளை தன் மனைவியின் புகைப்படத்தை பலர் பார்க்கும் படி முகப்பில் மாட்டி வைக்க பிடிக்கவில்லைபோலும்; அதற்காக ஏன் என் காலை பிடித்து கெஞ்ச வேண்டும் என்று புரியாத முதலாளியிடம்,

புதன், 22 ஜூலை, 2015

"நரிமுகம் மறைமுகம்!"

நாணயம் - நாணயம் !!!


தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க "மறுமுகம் அறிமுகம் "

இவர்கள் ஆர்டர் செய்த பொட்டலங்களை விட எண்ணிக்கையில் ஒரு பொட்டலம் கூடுதலாக இருந்தது.

செவ்வாய், 21 ஜூலை, 2015

"மறுமுகம் அறிமுகம்"

போவோமா  ஊர்கோலம்....

நண்பர்களே,

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பல்வேறு வேறுபாடுகளில் "முகங்கள்" என உருவகபடுத்தபடும் "தன்மைகள்" ஆங்கிலத்தில் "Characters " என்பதும் அடங்கும்.

திங்கள், 20 ஜூலை, 2015

"மொய் விலக்கபடவில்லை"



பரிசுப்பொருள்- என்ன பொருள்?

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் ஒரு விழா அழைப்பிதழ் கிடைக்க பெற்றேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2015

" நல் வாழ்த்துக்கள்"

நண்பர் விசுவின் 50 ஆவது பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

Image result for pictures of 50th birthday cakes

ஆண்டவனின் பேரருளால் 
ஆண்டுகள் பல கடந்து -நமை
ஆண்டவனின் தேசமதில் -ஐம்பதாம்
ஆண்டு விழா!

"யாரங்கே...?"


ராஜ ரகசியம்!!


தொடர்கிறது....


முதலில் இருந்து வசிக்க ராஜ யோகம் விஜயம் செய்க.

இந்த அரண்மனையில் மொத்தம் 775 அறைகள் அவற்றுள் 19 பிரதானிகளின் அறைகள் ,52 அரச குடும்பங்களுக்கான படுக்கை அறைகள்,188 அலுவலர்கள் குடி இருப்புகள், 92 ராஜீய  அலுவலகங்கள்,78 குளியல் அறைகள் கொண்ட, 108 மீட்டர் அகலம்  கொண்ட முகப்பும் 120 மீட்டர் நீளமும்,24 மீட்டர் உயரமும் , நிலமட்டத்தின் கீழுள்ள  தளத்தில் இருந்து கூரை வரையிலான மொத்த பரப்பளவு 77,000 சதுர மீட்டர்   கொண்டது.

"ராஜ யோகம்"


"கோ" கோ தான் கொஞ்ச(ர) நேரத்துக்கு!"!

நண்பர்களே,

பழங்கால ராஜா ராணி கதைகளை கேட்க இன்னமும் நம்மில் பலரும் சிறு பிள்ளைகள்போல ஆர்வம் காட்டுவது  அசைக்க முடியாத உண்மை.

புதன், 15 ஜூலை, 2015

"என்ன அவசரம்?"

மடை திறக்கட்டும்!!

நண்பர்களே ,

இளங்கலை முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு என்று நினைக்கின்றேன்,

கல்லூரிக்கு பெரும்பாலான நாட்கள் சைக்கிளிலும் சில நாட்கள் மட்டும் பேருந்திலும் பயணம் செய்துவந்த சமயம்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

"காலை ஜப்பானில் காபி"

பில்டர் பண்ணி குடிங்கோ.. 


நண்பர்களே,

அமரர் திரு கே பாலச்சந்தர் கைவண்ணத்தில் உருவான திரை காவியம், "நினைத்தாலே இனிக்கும்".

"மன நிறைவு"

வாழ் நாள் முழுவதும்

நண்பர்களே,

பலமுறை பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செல்லும் வாய்ப்புகள்  நமக்கு கிட்டி இருக்கும் அல்லது நாம் ஏற்படுத்திகொண்டிருப்போம்.

"சொன்னது நீதானா?"

வரேம்மா.....வரமா..?

தொடர்கிறது........

முதலில் இருந்து வாசிக்க அஞ்சல் பெட்டி 520 

எங்கள் பள்ளியில் விடுதியும் உள்ளது, அந்த விடுதியில் படிக்கும் மாணவர்கள் சொல்லும் பல சுவாரசியமான விஷயங்களை கேட்டு கேட்டு என்னையும் அந்த விடுதியில் சேர்க்கும்படி என் பெற்றோர்களை நான் அறியா பருவத்தில் அதாவது விடுதி என்றால் என்னவென்றே அறியாத பருவத்தில் வற்புறுத்தி இருக்கின்றேன்.

திங்கள், 13 ஜூலை, 2015

"அஞ்சல் பெட்டி 520"

படமா... பாடமா?

நண்பர்களே,

ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்ததை ஏற்கனவே என்னுடைய சில பதிவுகளின் ஊடாய் அறிந்திருப்பீர்கள், இது நம்மில் பெரும்பான்மையானோருக்கு நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.

கை நிறைய காசு.

நல்ல நோட்டு

நண்பர்களே,

சீக்கிரம் பணக்காரர்களாக ஆகவேண்டுமாயின்,நேர்மையான கடின உழைப்பும், கடவுளின் ஆசியும் ஒருங்கே அமைய பெற்றால் நிச்சயம் சாத்தியம் என்று அறுதி இட்டு உறுதியாக  சொல்லமுடியாது.

சனி, 11 ஜூலை, 2015

"மரகத நிமிடங்கள்"

தாழ்மை உயர்வு!

நண்பர்களே,

நம் வாழ்க்கையில் ஒரு சில மகான்களையும், ஆதர்ஷ புருஷர்களையும், உலகறிந்த பல நல்ல தலைவர்களையும், சிறந்த கல்வியாளர்களையும் , மத குருக்களையும்,சமூக சேவகர்களையும் நேரில் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தால அதை நாம் எப்படி கொண்டாடுவோம் என்பது நமக்கு தெரியும் .

செவ்வாய், 7 ஜூலை, 2015

"இந்தியா என் தாய்நாடு"

சொந்தகா(ர)ர்கள்


நண்பர்களே, 

நம்மில் எத்தனைபேர் , தேச பக்தியை நம் வாழ் நாளில் பிரதி பலிக்கின்றோம். 

திங்கள், 6 ஜூலை, 2015

எட்டிப்பார்க்காதே...எட்டிப்போ !!

எட்டிப்பிடி --எப்படி?
நண்பர்களே,

வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்குண்டான சிமன்ட்டு, மணல், செங்கல், மர சாமான்கள், பலகைகள் மற்றும் பெயிண்ட் போன்ற பொருட்கள் வீட்டின் பின் பக்கம் அடுக்கி வைக்கபட்டிருந்தன்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

காவலனே! கண் திறவாய்!

மலரும் முள்ளும்.


தூரத்தில் இருந்த என்னை 
புன்னகித்து அருகில் 
புறப்பட்டு வா என
 அழைத்தது  ஒரு 
அழகிய ரோசா பூ.

சனி, 4 ஜூலை, 2015

"தேள் வந்து பாயுது காதினிலே.....!."

"சீர்" கேடு!

நண்பர்களே,

இன்றைய திரைப்பட பாடல்கள் பெரும்பாலும் கருத்துமிக்க பாடல்களா என்று கேட்டால் அதற்க்கான விடை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

உன்"ஐ"கண் தேடுதே.

ஐ""யோ!! "ஐ"யோ!!

முதலில் இருந்து கண்களை பார்க்க  முதற்கண் ஐரோப்பாவில் மெட்ராஸ் ஐ படிக்கவும். 

கருப்பு கண்ணாடியை  கழற்றுங்கள் என்று சொன்ன  அந்த அலுவலர் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டுதான் இருந்தார்.

வியாழன், 2 ஜூலை, 2015

"ஐ"ரோப்பாவில் மெட்ராஸ் "ஐ".

கண்கள்  இரண்டால்....

நண்பர்களே,

கண்களை பாதிக்கும் பலவிதமான நோய்களுள் அதிகமான வலியையும் தொற்றையும் ஏற்படுத்தும் நோய், கண்வலி.

செவ்வாய், 30 ஜூன், 2015

"வாழைபழத்தில் மயக்க ஊசி"

 சீப்பா?

நண்பர்களே,

உலகிலேயே மிக எளிய இனிய பழங்களுள் எனக்கு மிகவும் பிடித்த பழம் ஒன்று உண்டென்றால், அது வாழைப்பழம் தான்.

திங்கள், 29 ஜூன், 2015

"சிரஞ்சீவி"

என்றென்றும்!!

நண்பர்களே,

நம்மில் பலருக்கு , சினிமா என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத அங்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

"தமிழ் ...டமீல்...டுமீல்!!"

தங்லீஷ்

நண்பர்களே,

இந்தியாவில் இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தருணங்களில்,

ஞாயிறு, 28 ஜூன், 2015

"பாத யாத்திரையும் பரீட்சை முடிவுகளும்"

முடிவல்ல ஆரம்பம்.


நண்பர்களே, 

யாத்திரை தொடர்கிறது..ஆரம்பத்தை பார்க்க  பாத யாத்திரை .....

விசாரித்ததில் வரிசையில் இருப்பவர் இரண்டாவது முறையாக வருவதாகவும் இதற்கு முன்னால் சாப்பிட்ட அடையாளம் அவர் கையில் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும்

சனி, 27 ஜூன், 2015

"பாத யாத்திரை"

இலவச இணைப்பு


நண்பர்களே,

மலையனூர் மலைப்பின் தொடர்ச்சியாகவும் இந்த பதிவினை கருதலாம்.

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே,வங்கி மற்றும் தொலைபேசி துறை போன்ற மத்திய அரசு  பணிகளுக்கான தகுதி  தேர்வுகளில் பங்குகொள்ளும் வாஞ்சை நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் உள்ளத்தில் உதித்தது.

வெள்ளி, 26 ஜூன், 2015

"உள்ளம் உருகுதே"

நெருப்பே!!

மெழுகோடு உனக்கு அப்படியென்ன ஜென்ம பகை.
அதை கண்டாலே உன் வயிறு ஏன் அப்படி எரிகிறது?

வியாழன், 25 ஜூன், 2015

துப்"போர்"க்கு தப்பார்க்கு துப்பாக்கி..."

குறி தப்பாது

துப்பார்க்குத் துப்பாய ....எனும் வார்த்தைகளைக்கொண்டு  துவங்கும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் என்னை தவிர உங்கள் அனைவருக்கும் மிக மிக தெளிவாக தெரிந்திருக்கும்;

செவ்வாய், 23 ஜூன், 2015

"மலையனூர் மலைப்பு."


திகைப்பு.

நண்பர்களே,


கடந்த சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரத்திற்கு சென்று வந்ததை குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அது இது எது? படித்துபாருங்கள்.

சனி, 20 ஜூன், 2015

"கிளிமாஞ்சோறோ"

உயர பறந்தது உலையில் கொதித்தது !!

நண்பர்களே,

ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிக மிக உயரமான அதே சமயத்தில்   எந்த ஒரு மலையின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிப்பெரும் மலையாகவும் அதன் உச்சியில் மூன்று மாபெரும் எரிமலை முகடுகளை தன் தலையில் சுமந்திருக்கும்  டான்சானியா நாட்டில் கம்பீரமாக  இருக்கும் மலையின் பெயர் தான் "கிளிமாஞ்சாரோ" என்பது நம்மில் அநேகருக்கு தெரியும்.

வெள்ளி, 19 ஜூன், 2015

"ஒட்டு மீசை"

பெண் (சு)தந்திரம் 


நண்பர்களே,

சமீபத்தில் ஒரு சக பதிவாளரின் பதிவினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அந்த பதிவின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் பாதிக்கவும் செய்தது, அந்த பாதிப்பின் விளைவாக விளைந்ததுதான் இந்த பதிவு.

"பர(ற)ந்த வான வீதியில்...." 2

நெஞ்சிலே வந்ததே.....

மெழுகொளி   ப(தொ)டர்கிறது.............

முதலில் இருந்து தெரிந்துகொள்ள : "பர(ற)ந்த வான வீதியில்...."

Image result for picture of students farewell

இப்படி மெழுகு வர்த்திகள் உருகுகின்றனவா, அல்லது அந்த அறையில் கூடியிருந்த அத்தனை பேர்களின் இதயங்கள் உருகுகின்றனவா என இனம் பகுத்தறிய கூடா வண்ணம்  அந்த நிகழ்ச்சியை ஒரு உணர்வுபூர்வமாக -உணர்ச்சிபூர்வமாக மாற்றிய அந்த பாடலும் அதன் இசையும் அதன் ராகமும் (குரலும்???)ஒலித்த வார்த்தைகள் இதோ உங்களுக்காக.

வியாழன், 18 ஜூன், 2015

"பர(ற)ந்த வான வீதியில்...."

அந்த நாள் ........


நண்பர்களே,

முதலாமாண்டு முதுகலை மாணவர்கள் இணைந்து , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சியின்போது நடந்த அந்த நினைவுகளின் சில பகுதிகளை இங்கே இந்த நேரத்தில் நினைவுகூர என்னை தூண்டிய ஒரு விஷயம்:

சனி, 13 ஜூன், 2015

"நல்ல திருடன்?"



திருடர்கள் ஜாக்கிரதை!!

திருட்டு என்றாலே அது கீழ்த்தரமான சமூக விரோத  செயல் என்பதும் திருடன் என்பவன் இழிவானவன்  தண்டனைக்குறியவன் என்று அறிந்திருக்கும் நமக்கு,

வெள்ளி, 12 ஜூன், 2015

"நோகாது"


கடுக்கண்

நண்பர்களே,

நம்ம ஊரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் உறவுகளின் உரிமையாகவும் கொண்டாடப்படும் பல பாரம்பரியமான நிகழ்வுகளுள் ஒன்றுதான்

செவ்வாய், 9 ஜூன், 2015

"இந்நாள் - பொன்னாள்- PHONEனால்!!!"

 PHONEஆ வருமா?


நண்பர்களே,

இனிய காலை  பொழுது இன்முகத்துடன் விடிந்து என்னை துயில் களைய பணித்தது.

புதன், 3 ஜூன், 2015

"வாட் டு யூ மீன்???"

ஐ மீன்....


நண்பர்களே,

நம்மில் எத்தனை பேருக்கு மீன்களை பிடிக்காது, அதுவும்  கண்ணாடி தொட்டிகளில்  துள்ளித்தவழும் அழகழகான வண்ண மீன்களை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.

ஞாயிறு, 31 மே, 2015

"பயணம் மகிழ்வானதாகட்டும்"

வாழ்த்துக்கள்!!

நண்பர்களே,

நம்மில் யாரேனும் வெளி ஊர் அல்லது வெளி நாடு பயணம் மேற்கொள்ளும்போது, நமது நண்பர்கள், உறவினர்கள், அல்லது நமது நலம் விரும்புவோர், நம்மை வாழ்த்தி நமது பயணம் நல்லபடியாக அமைய நல் வார்த்தைகளை சொல்லி வழி அனுப்புவது வழக்கம்.

சனி, 30 மே, 2015

"வயது பத்தாது".

வயது கண்டு எள்ளாமை ....


நண்பர்களே,

எந்த ஒரு செயல் செய்வதற்கும் அதை செய்பவர்களின் வயதுக்கும் சம்பந்தபடுத்தி பேசுவதும் கொண்டாடுவதும் திட்டி தீர்ப்பதும் உலகில் சாதாரணம்.

புதன், 27 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 4

நிகழ்ச்சி தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க .

விழா இப்படியாக நிறைவடையும் தருவாயில் விழா அரங்கம் முழுவதும் ஒரு பரபரப்பு ஆட்கொண்டது.

செவ்வாய், 26 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 3



நிகழ்ச்சி தொடர்கிறது......

முதலில் இருந்து படிக்க .

பூம்புகார் நகரை விட்டு,கோவலனின் முந்தைய கேவலமான வாழ்வின் சுவடுகளை சிதைத்து விட்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தை வேறு பிராந்தியத்தில் துவக்கலாம் , இனி வாழ்வின் எல்லா சுகங்களையும் இம்மியளவும் மிச்சமின்றி வாழ்ந்து சுகிக்கலாம் என இன்ப கனவுகளும் இனிய நினைவுகளுமாக,

திங்கள், 25 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 2

நிகழ்ச்சி தொடர்கிறது.....

முதலில் இருந்து படிக்க ..


ஓரங்க நாடகங்கள், குழு நடனங்கள், தனி திரள்காண் நிகழ்வுகள்   என பஞ்சமில்லா பஞ்சு  மிட்டாய் நிகழ்ச்சிகள்.

சனி, 23 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 1

யான் பெற்ற இன்பம்


நண்பர்களே,   

கடந்த வார இறுதியில் ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மனம் லயித்து மகிழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

வெள்ளி, 22 மே, 2015

" மாலை முரசு - மனசெல்லாம் சொகுசு"

வெற்றி கொட்டும் !!


நண்பர்களே,

எங்கள் ஊரின் பல சிறப்புகளுள், கோவில்கள், மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், காவலர் கல்லூரிகள், சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட ஆறு, மலைகள்,வரலாற்று சிறப்பு மிக்க , எங்கள் ஊரையும் பக்கத்திலுள்ள ஊரையும் இணைக்ககூடிய சுரங்கபாதைகள் கொண்ட பழங்கால அதே சமயத்தில் இன்னும் கம்பீரமாகவும் வலிமையுடனும் காணப்படும் உபயோகபடுத்தபட்டு கொண்டிருக்கும்  கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அடுத்து,

வெள்ளி, 15 மே, 2015

"சுபயோக சுபதினங்கள்"

பெரியோர்களால் நிச்சயித்த (பல) வண்ணம் !!

நண்பர்களே,

இந்தியாவை விட்டு கடல் கடந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இழந்து தவிக்கும், இந்தியாவில் மட்டுமே அனுபவித்து மகிழ்ந்த பல அருமையான விஷயங்களுள் தலையான ஒன்று என் குடும்பத்தினரின் அன்பும் என் நண்பர்களின் நட்பும் என்று சொன்னால் அது மிகை அல்ல.

செவ்வாய், 12 மே, 2015

"ஆயத்தம் ஆச்சரியம்"!!!!


நான்  தயார் நீ  தயாரா?


மழை  வரும், வெயில் அடிக்கும் என்று அறிந்து குடையை கூடவே கொண்டு செல்பவர்களை நமக்கு தெரியும்

அதே போல, காலை எழுந்த உடன் பசிக்கும் என்று தெரிந்து அதற்கான உணவு பொருட்களை முன்தினமே தயார்படுத்துவதும் அடுத்த வேளை  உணவிற்கு அதை முன்னமே தயாரித்து வைத்து வேளா வேளைக்கு சாப்பிடுவதும் உலகில் சர்வ சாதாரணமாக நடக்கும் தயார் நிலை வேலைகள் தான்.

சனி, 9 மே, 2015

"கோபால் பல்பொடி".



வேரடி மண்.


நண்பர்களே,

பல வருடங்களுக்கு முன் வானொலியில் கேட்ட ஒரு விளம்பரம்:

இந்தியா இலங்கை, மலேசியா சிங்கபூர் ஆகிய நாடுகளில்  மக்களின் பேராதரவு பெற்ற  பல்பொடி, "கோபால் பல்பொடி".

Image result for pictures of gopal tooth powder

இந்த விளம்பர வாசகம் சமீபத்தில் என் மன கிடங்கில் இருந்து என் காதுகளில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.

வெள்ளி, 8 மே, 2015

"டீயா" வேலை செய்யனும் குமாரு!!

இலைமறைவு

நண்பர்களே,

மனித குலம், ஏற்ற இறக்கங்கள், உயர்வு, தாழ்வு, வசதி, வறுமை,ஆண்,பெண் சாதி, மதம்,  மொழி, இனம், இன்னும் எத்தனயோ வேறுபாடுகளை பொருட் படுத்தாமல், உலகின் எல்லா மனிதரும் தினமும் சுவைத்து மகிழக்கூடிய "பானங்களில்" தண்ணீருக்கு அடுத்தபடியாக பெருமளவிற்கு பயன்படுத்தப்படும் பானம் தேநீர் என்றால் அது மிகை அல்ல என்று சொல்லவும் வேண்டுமோ?

சனி, 2 மே, 2015

"கொடுத்து வைத்தவர்கள்"


கடன்-வட்டி

நண்பர்களே,

நாம் அன்றாடும் கேட்க்கும் சொற்றொடர்களுள் , உனக்கென்னப்பா, நீ "கொடுத்து வைத்தவன்", அவனுக்கென்னப்பா அவன் "கொடுத்து வைத்தவன்", அவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்".....இவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்" .... போன்றவையும் அடங்கும்.

வெள்ளி, 1 மே, 2015

"கண்ணும் GUNம் NOKIA"

கொள்ளை கொள்ளும் மாபியா


நண்பர்களே,

இந்த நாட்டுக்கு  (இங்கிலாந்து) வந்த புதிதில் சில விஷயங்களால், ஓரளவிற்கு மனதளவில் வருத்தமாகவே இருந்தேன், இந்த வருத்தத்தை போக்க முடியாது என்பதால் அந்த வருத்தத்தை வாடிக்கையாக்கி பழகிக்கொள்ள சில காலங்கள் ஆனது.

வியாழன், 30 ஏப்ரல், 2015

வாய்க்கு சர்க்கரை போடுங்கள்!!

இனிக்கட்டும் இதயங்கள்  

நண்பர்களே,

"இனிப்பு" என்பது நல்ல, மங்களகரமான, மகிழ்ச்சியான, சந்தோஷங்களை நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிபவர், குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் பரிமாறப்படும் ஒன்று என்பது நம் எல்லோரும் அறிந்ததே.

யாரேனும் நல்ல வாக்குகள், அல்லது வாழ்த்துக்கள் சொல்லும்போது "உங்க வாய்க்கு சர்க்கரை போடணும்" என்று சொல்வதும் ஒருவேளை வீட்டில் இருந்தால் உடனே சர்க்கரையை அள்ளி அவர்களின் வாயில் போட்டு தம் மகிழ்ச்சியை தெரிவிப்பதும் வழக்கம் தான்.

அதே போல தமக்கு வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அந்த அரசியல் கட்சியை சார்ந்த தொண்டர்கள், தங்களுக்குள் மட்டுமல்லாது சாலையில் வருவோர் போவோருக்கெல்லாம் இனிப்பு கொடுத்து மகிழ்வது வழக்கம்.

அதே போல கிரிக்கெட்டில், கால்பந்தாட்டத்தில் மற்றும் பல விளையாட்டுகளில் தாம் ஆதரிக்கும் டீம்கள் வெற்றி பெற்றால் உடனே இனிப்பு கொடுத்து அந்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்றோம்.

பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண கொண்டாட்டங்களின் போது கேட்கவே வேண்டாம் இனிப்பு கட்டாய மாக இடம் பெறும். திருமண விருந்துகளில் இலையில் முதலில் வைக்கபடுவதே இனிப்புதானே?

புத்தக வெளியீட்டு  விழாக்களிலும் கூட இப்போதெல்லாம் இனிப்பு பரிமாரபடுவதாக கேள்விபட்டேன், புத்தகமே ஒரு இனிப்புதானே அதுவும் அங்கே வந்திருக்கும் விருந்தினரை காண்பதும் இனிமைதானே?

இன்னும் அடுத்த மாதங்களில் வெளியாகபோகும் பரீட்சை முடிவுகளின்போது இந்த இனிப்புகள் அல்லோலகல்லோலபடபோது தெரிந்ததே.

சரி இந்த வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது?

மேற்கு மத்திய அமெரிக்காவில்  அக்டோபர் மாதம் 8 ஆம்  நாள் 1921 ஆம் ஆண்டு "இனிப்பான நாள்" என்று முதன் முதலில் அறிவித்து அதை அமெரிக்கர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  இது முழுக்க முழுக்க வியாபார நோக்கில் கொண்டு வரப்பட்டது.

Image result for PICTURES OF SWEETS

ஆனால் நம் இந்திய அதுவும் தமிழ் பண்பாட்டு நாகரீக பரிணாம வரலாற்றை ஆராய்ச்சி செய்யும்போது  தெய்வ  வழி பாட்டில் மா விளக்கு,சூரணம், கொழுகொட்டை  மற்றும் பல  இனிப்பு வகைகளை படைத்ததாக அறிகின்றோம்.

அதே போல அக நானூறு போன்ற இலக்கிய படைப்புகளில் காதலியை பார்க்க வரும் காதலன் மலையிருக்கும் பாறை இடுக்குகளில் கட்டபட்டிருக்கும் தேன் கூட்டிலிருந்து தானே கொண்டுவந்த அந்த மலைதேனோடு அவனது சிலை தேனை காண காத்திருந்ததாக  அறிகின்றோம்.

ஆனால் இப்போதெல்லாம் காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் "அல்வா" அல்லவா கொடுக்கின்றனராம்.  அதுவும் இனிப்பு தானே?

சரி பதிவின் பாதை மாறுகிறதோ?

இப்படி நம் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள இனிப்பு கொடுத்து பழகிவிட்ட நாம் இந்த காலத்தில் கொஞ்சம் யோசித்துதான் செய்ய வேண்டி இருக்கின்றது.

கடந்த முறை ஊருக்கு சென்றபோது தெரிந்த ஒரு குடும்பத்தை பார்த்துவரலாம் என்று அவர்களது வீட்டுக்கு சென்றேன், கடந்த காலத்தில் அவர்கள் எங்கள் வளர்ச்சிக்கு பல விதங்களில் தடையாய் இருந்தவர்கள் வரப்பு சண்டையில் உறவு  விரிசலாய்  இருந்தது.

பார்த்து வெகு காலமாகி விட்டதினால் அவர்களை பார்க்க சென்றிருந்தேன் அப்படி செல்லும்போது வெறும் கையேடு செல்வது நன்றாக இருக்காது என்றெண்ணி (கையில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றேன் என்று நினைக்காதீர்கள்),  கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் பழம் வாங்கிகொண்டு சென்றேன்.

கொஞ்சம் வயது முதிர்ந்திருந்த அவர்களை வணங்கிவிட்டு வாங்கிகொண்டுவந்திருந்த இனிப்பையும் பழத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.

எதுக்குப்பா இதெல்லாம் உங்க அன்பு இருந்தா அதுவே போதும் என்று சொல்லி தயக்கத்துடன் அந்த பையை வாங்கி பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததை அவர்கள் முகம் காட்டி கொடுத்து விட்டது.

நானும் கொஞ்சநேரம் அவர்களோடு பேசிவிட்டு அவர்கள் கொடுத்த தேநீரை , சர்க்கரை இல்லாததால்  சர்க்கரைக்கு மாற்று மாத்திரைபோன்று போட்டு கொடுக்க பருகிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

பிறகு வீட்டில் உள்ளவர்கள் சொல்லித்தான்  எனக்கு தெரிய வந்தது அவர்கள் இனிப்போ நான் வாங்கி சென்ற வாழை பழங்களையோ சாப்பிட கூடாது என்று ஏனென்றால் அவர்களுக்கு சர்க்கரை நோயாம்.

அப்போது எனக்கு சுரீர் என்று மனதில் பட்டது, ஒருவேளை அவர்கள் இனிப்பு சாப்பிடகூடாது என்று தெரிந்தே நான் அப்படி செய்ததாக நினைத்துகொள்வார்களோ?, இன்னும் அந்த பழைய பகையின் புகை என் மனதில் இருப்பதாக நினைத்து கொள்வார்களோ? என நினைத்து வருத்தப்பட்டேன்.

மீண்டும் விடுப்பு முடிந்து இருப்பிடம் திரும்பிய நான் இதை என் நண்பர்களிடம் சொல்லும்போது அவர்கள் சொன்னார்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் படியான சாக்லட் இப்போது மார்கெட்டில் உள்ளது , அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது அதை வாங்கி சென்று அவர்களுக்கு கொடுத்துவிடு, இதற்காக ஏன் வருந்துகின்றாய் என்றார்கள்.

நான் அடுத்த விடுப்பு வரை காத்திராமல். அடுத்த மாதமே சென்னைக்கு சென்ற என் நண்பர் மூலம் அந்த சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் விசேஷித்த சாக்லட் பார்களை வாங்கி கொடுத்தனுப்பி அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

நண்பரும் அதை கொடுத்த செய்தி அறிந்து மனம் ஆறினேன்.

மேலை நாடுகளில் யார் தேநீர்  அல்லது காபி கொடுத்தாலும் சர்க்கரை வேண்டுமா? வேண்டுமானால் எத்தனை கரண்டி போடவேண்டும் என கேட்டு தான் இனிப்பு கலந்து கொடுப்பது வழக்கம்.

Image result for PICTURES OF DIABETIS CHOCOLATES

நண்பர்களே,  நம் சந்தோஷத்திற்க்காக அடுத்தவர் உடல் ஆரோக்கியத்தில் நாம் நமது விருப்பங்களை நுழைக்கலாமா?

இனி யார் எந்த நல்ல செய்தி , வாழ்த்து சொன்னாலும் அவர்கள் வாயில் சர்க்கரை  போடுவதற்கு முன் அவர்கள்  சர்க்கரை சாப்பிடலாமா என அவர்கள் வாயால் கேட்டு அறிந்தபின் சர்க்கரை அள்ளி கொட்டுங்கள் உங்கள் மகிழ்ச்சியின் தாளத்தை தட்டுங்கள்.

அதே சமயத்தில் உங்கள் சார்பாக வேறொருவரிடம் சொல்லி மற்றவர்களுக்கு அவர்கள் வாய்க்கு சர்க்கரை போடும்படி சொல்லாமல் நீங்களே நேரில் சென்று/வந்து  அதை அவர்களின் அனுமதியுடன் செய்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே,  சுவையும் கூடுமே.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ